மனசு வலித்தது, நெஞ்சு கனத்தது
நீ கல்யாண பத்திரிகை நீட்டியதும்..உன் மேல் வைத்த காதலின்
உண்மை அன்பை உணர்த்த
ஏதாவது செய்தாக வேண்டுமென
இதயம் துடித்தது..
தற்கொலை செய்துகொள்ள
துணிச்சல் இல்லை..
தாடியோடு சுற்றினால்
வீட்டில் இடமில்லை..
பிளேடால் கீரிக்கொன்டால்
B +ve க்கு வழியில்லை..
நல்ல விதமாய் சேர்த்து வைக்க
'நாடோடிகள்' இல்லை..
சாராய பாட்டிலோடு
தேவதாஸ் ஆக
சரக்கு ஒன்னும்
ஓசியில் கிடைப்பதில்லை..
என்ன செய்யலாம் என
இரண்டு நாள் யோசித்து
அழகாய் பெண் குழந்தை பெற்று,
அவளுக்கு உன் பெயரை வைப்பதென
பெண் பார்க்க சொல்லிவிட்டேன் வீட்டில்..
No comments:
Post a Comment